என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
பீளமேட்டில் கல்லூரி மாணவர் தற்கொலை
கோவை:
பெங்களூரை சேர்ந்தவர் இளவழகன். இவரது மகன் மோகன்(வயது 18). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார்.
பாலாஜி நகரில் ஒரு வீட்டில் நண்பர்களுடன் வாடகைக்கு தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த நண்பர்கள் அறைக்கு திரும்பிய போது மோகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மோகனுக்கு நடனத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. கல்லூரியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மோகன் பங்கேற்று நடனமாடுவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனுக்கு ஒரு விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மோகனால் நடனமாட முடியவில்லை.
இதனால் மோகன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நண்பர்கள் அவரை தேற்றி வந்துள்ளனர். இந்த வருத்தத்தில் மோகன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்