என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி
Byமாலை மலர்29 Oct 2016 8:04 AM IST (Updated: 29 Oct 2016 8:04 AM IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 27-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்ததால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை விலகி சென்றுவிட்டதாகவும், இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்குவதற்கான சூழல் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ‘கியான்ட்’ புயல் முழுவதுமாக வலு இழந்துள்ளது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இந்தநிலையில் இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 30-ந்தேதி (நாளை) உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீட்டர் வரை பெய்யும். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை இயல்புநிலையை ஓட்டியே இருக்கும். அதாவது 39 முதல் 44 செ.மீட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வானிலை மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 27-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்ததால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை விலகி சென்றுவிட்டதாகவும், இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்குவதற்கான சூழல் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ‘கியான்ட்’ புயல் முழுவதுமாக வலு இழந்துள்ளது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இந்தநிலையில் இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 30-ந்தேதி (நாளை) உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீட்டர் வரை பெய்யும். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை இயல்புநிலையை ஓட்டியே இருக்கும். அதாவது 39 முதல் 44 செ.மீட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வானிலை மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X