என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
புதுவையில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு: நாராயணசாமி தகவல்
பாகூர்:
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் திடலில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், பாகூர், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம், மதி கிருஷ்ணாபுரம், மணப்பட்டு, பரிக்கல்பட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பண்டிகையில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். புதுவை மதசார்பற்ற மாநிலம் என்பதால் தான் இங்கு சமத்துவ பொங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து, வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சட்டமன்ற கூட்டத்தில் விவாதித்து, இடைக்கால நிவாரணம் குறித்து முடி வெடுக்கப்படும். அதன்பின், மத்திய அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் அறக்கட்டளை தலைவர் அசோக் ஷிண்டே, செந்தில்குமார், நாராயணன், ஜீவகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்