என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கலிதீர்த்தாள்குப்பத்தில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைது
திருபுவனை:
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 31). தொழிலாளி.
தமிழக பகுதியான வாக்கூரில் இவரது உறவினர் வசித்து வருகிறார். அவரது இல்ல விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, சத்தியசீலன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 3 நாட்கள் கழித்து திரும்பி வந்தபோது, அவர்களுடைய வீட்டு கதவு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சத்தியசீலன் குடும்பத்தினர் பதட்டத்துடன் வீட்டுக்குள் சென்றனர்.
அந்த வீட்டில் இருந்த பீரோவும் திறந்திருந்தது. அதில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.
நகை கொள்ளை குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், நகையை கொள்ளையடித்தது அதே பகுதியை சேர்ந்த முரளி (21), திருபுவனையை சேர்ந்த பிரதீப்குமார் என்பதும், ஒரு சிறுவன் அவர்களுக்கு உதவியதும் தெரியவந்தது.
அதன்பேரில் முரளி, பிரதீப்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நெக்லஸ் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்