search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்
    X

    நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

    ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழலில் நள்ளிரவு 2.30 மணியளவில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு முதல்வர் பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று கூறினார். 

    மேலும் அவர் கூறியதாவது:-

    75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை. 

    வேறு எந்த முக்கிய தலைவர்களும், மத்திய மந்திரிகள் யாரும் சந்தித்து பேசியதாக நான் கேள்விப்படவும் இல்லை, பார்க்கவும் இல்லை. 

    அவரை பார்க்க நான் பலமுறை முயற்சி செய்து இருக்கிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க முடியாத ஒரு துர்பாக்கியசாமி என்று வருந்தி இருக்கிறேன். சந்தேகத்திற்கிடமான கேள்விகளை முன் வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

    அம்மா இறந்துவிட்டதாக செய்தி கேள்வி பட்டது முதல் எங்களுக்குள் இருந்த அனைத்து சக்திகளும் மறைந்து விட்டதாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்வதே நன்றிக் கடனாக இருக்கும். 

    இவ்வாறு தெரிவித்தார்.
    Next Story
    ×