என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
ஜெயங்கொண்டத்தில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்:
தமிழக விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சீனி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தனஞ்செயன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சோனியா காந்தியை விமர்சனம் செய்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும், கச்சைத்தீவை மீட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு விவசாயத்தை பாதுகாத்திடக்கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஐ.என். டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாவட்ட செயலாளர் பிச்சை பிள்ளை, உத்திராபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பரமசிவம், ராஜலிங்கம், ஆறுமுகம், அருளானந்தம் உட்பட 50-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட இளைஞரணி தலைவர் வில்சன் வரவேற்று பேசினார். முடிவில் நகர பொறுப்பு செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்