என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ
Byமாலை மலர்1 Jun 2017 2:41 AM IST (Updated: 1 Jun 2017 5:08 AM IST)
தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்தை அடுத்து கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 14 ஊழியர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
7 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் முதல் இரு மாடிகளில் தீ கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நுரைக்கலவை எந்திரம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக தகவல் வந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்தை அடுத்து கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 14 ஊழியர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
7 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் முதல் இரு மாடிகளில் தீ கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நுரைக்கலவை எந்திரம் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கட்டிடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக தகவல் வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X