என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
நெல்லை:
பாளையை அடுத்த கீழநத்தத்தை சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி ராசம்மாள்(வயது80). இவரது மகள் வீடு தாழையூத்து அருகே வண்ணான்பச்சேரியில் உள்ளது. அங்கு இவர் தினமும் செல்வார். அப்போது அவர் தாமிரபரணி ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் வரும் பகுதி வழியாக கடந்து செல்வது வழக்கம்.
கடந்த 18 ந் தேதி மகள் வீட்டுக்கு செல்வதற்கு வீட்டில் இருந்து ராஜம்மாள் புறப்பட்டார். ஆனால் அவர் மகள் வீட்டுக்கு செல்லவில்லை. தனது வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. இதனால் ராசம்மாளை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் செப்பறை கோவில் அருகே ஆற்றில் ராசம்மாள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று ராசம்மாள் உடலை மீட்டனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. ஆற்றைக் கடந்து வந்த போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்