என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நடராஜன் உடல்நிலை மோசம்: உறவினரின் கல்லீரலை பொருத்த முடிவு
Byமாலை மலர்28 Sept 2017 10:11 AM IST (Updated: 28 Sept 2017 10:11 AM IST)
நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் அவரது உறவினரின் கல்லீரலை தானமாக பெற்று பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான எம்.நடராஜன் (74) கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த 10-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்படுகிறது.
நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் கல்லீரல், சிறுநீரகம் வேண்டி தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரையில் உறுப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் நடராஜனை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் இன்று முடிவு செய்கிறார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடராஜன் உடல் தகுதியாக உள்ளதா? என்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. இன்று மாலை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து செல்கின்றனர்.
அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான எம்.நடராஜன் (74) கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த 10-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்படுகிறது.
நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் கல்லீரல், சிறுநீரகம் வேண்டி தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரையில் உறுப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் நடராஜனை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் இன்று முடிவு செய்கிறார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடராஜன் உடல் தகுதியாக உள்ளதா? என்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. இன்று மாலை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X