என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் எண் பதிவு செய்யும் வசதி அறிமுகம்
Byமாலை மலர்25 Nov 2017 3:16 AM GMT (Updated: 25 Nov 2017 3:16 AM GMT)
தபால் நிலையத்தில் புதிய ஆதார் எண் பதிவு செய்யும் வசதி, சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை:
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆதார் எண் பதிவு செய்யும் சேவையை இந்திய தபால் துறையானது, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்புடன் (யு.ஐ.டி.ஏ.ஐ.) இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சேவை சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
மதுரை, திருச்சி, கோவை, நாகர்கோவில், நெல்லை, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், மற்றும் புதுச்சேரி தலைமை தபால் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திலுள்ள மேலும் 1,434 தபால் நிலையங்களுக்கு படிப்படியாக ஓரிரு மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 70 தபால் நிலையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 14 ஆயிரத்து 756 திருத்தங்கள் நடைபெற்றுள்ளன.
வங்கிகள், தொலைபேசி சேவை நிறுவனங்கள், தபால் நிலைய வங்கிகள், சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகிப்பவர்கள் ஆகியோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யவும், ரேஷன் அட்டை வாங்கவும் இப்போது ஆதார் எண் கட்டாயம் வேண்டும்.
புதிதாக ஆதார் எண் பதிவு செய்ய வெகு சில இடங்களே இருந்தன. அங்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்களை தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களிலேயே செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆதார் எண் பதிவு செய்யும் சேவையை இந்திய தபால் துறையானது, இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்புடன் (யு.ஐ.டி.ஏ.ஐ.) இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சேவை சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
மதுரை, திருச்சி, கோவை, நாகர்கோவில், நெல்லை, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், மற்றும் புதுச்சேரி தலைமை தபால் நிலையங்களில் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திலுள்ள மேலும் 1,434 தபால் நிலையங்களுக்கு படிப்படியாக ஓரிரு மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 70 தபால் நிலையங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 14 ஆயிரத்து 756 திருத்தங்கள் நடைபெற்றுள்ளன.
வங்கிகள், தொலைபேசி சேவை நிறுவனங்கள், தபால் நிலைய வங்கிகள், சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகிப்பவர்கள் ஆகியோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யவும், ரேஷன் அட்டை வாங்கவும் இப்போது ஆதார் எண் கட்டாயம் வேண்டும்.
புதிதாக ஆதார் எண் பதிவு செய்ய வெகு சில இடங்களே இருந்தன. அங்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்களை தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களிலேயே செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X