என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
106 வயது முன்னாள் இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. நேரில் பொங்கல் வாழ்த்து
Byமாலை மலர்15 Jan 2018 10:15 AM IST (Updated: 15 Jan 2018 10:15 AM IST)
106 வயதாகும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமியை புதுவை டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது106). இவர் கடந்த 1937-ம் ஆண்டு புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அதன்பின் பதவி உயர்வு பெற்று முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி இருதயமேரி.
இவர்களுக்கு 5 பிள்ளைகள். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது நெல்லித்தோப்பு வீட்டில் வசித்து வரும் ஆரோக்கியசாமி 100 வயதை கடந்து விட்டதால் தற்போது 2 பென்சன் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் புதுவை போலீசார் 106 வயதான முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பட்டுவேட்டி -சட்டை அணிந்து ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்றார். அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.
போலீஸ் டி.ஐ.ஜி. க்கள் சந்திரன், ராஜிவ்ரஞ்சன், ஆயுதபடை கமாண்டன்ட் பர்ன்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், கொண்டாவெங்கடேஸ்வராவ், இன்ஸ்பெக்டர்கள் வீரவலல்வன், செந்தில்குமார், தனசெல்வம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
டி.ஜி.பி. சுனில்குமார் தன்வீட்டில் தயார் செய்த பொங்கல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை ஆரோக்கியசாமிக்கு கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் மற்ற போலீசாரும் வாழ்த்து பெற்றனர். #TamilNews
புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது106). இவர் கடந்த 1937-ம் ஆண்டு புதுவை காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். அதன்பின் பதவி உயர்வு பெற்று முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி இருதயமேரி.
இவர்களுக்கு 5 பிள்ளைகள். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது நெல்லித்தோப்பு வீட்டில் வசித்து வரும் ஆரோக்கியசாமி 100 வயதை கடந்து விட்டதால் தற்போது 2 பென்சன் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் புதுவை போலீசார் 106 வயதான முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி மற்றும் அவரது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பட்டுவேட்டி -சட்டை அணிந்து ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்றார். அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.
போலீஸ் டி.ஐ.ஜி. க்கள் சந்திரன், ராஜிவ்ரஞ்சன், ஆயுதபடை கமாண்டன்ட் பர்ன்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், கொண்டாவெங்கடேஸ்வராவ், இன்ஸ்பெக்டர்கள் வீரவலல்வன், செந்தில்குமார், தனசெல்வம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
டி.ஜி.பி. சுனில்குமார் தன்வீட்டில் தயார் செய்த பொங்கல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை ஆரோக்கியசாமிக்கு கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் மற்ற போலீசாரும் வாழ்த்து பெற்றனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X