search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தமபாளையம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்
    X

    உத்தமபாளையம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்

    உத்தமபாளையம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    தேனி:

    உத்தமபாளையம் அருகில் உள்ள என்.டி.பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சுரபியா (வயது21). இவர் கம்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுரபியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி ஆஸ்பத்திரிக்கு போன் செய்து விசாரித்தார். அவர்கள் சுரபியா வேலை முடிந்து சென்று விட்டதாக கூறினர்.

    அக்கம் பக்கம் தேடி பார்த்தும் சுரபியா காணாததால் சுப்பிரமணி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான சுரபியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தேசியவிநாயகம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஞானசவுந்தர்யா (21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஞானசவுந்தர்யா வீடு திரும்பாததால் ராமசாமி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். அங்கு இல்லாததால் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன ஞானசவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×