என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்10 May 2018 10:29 AM GMT (Updated: 10 May 2018 10:29 AM GMT)
மதுரை அருகே பாலமேட்டில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு ராம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 50). இவரது மனைவி சுசிலா (45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்த அவர்கள், அதில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய மகேஸ்வரன் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (42). இவரின் பெற்றோர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு ராம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 50). இவரது மனைவி சுசிலா (45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்த அவர்கள், அதில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய மகேஸ்வரன் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (42). இவரின் பெற்றோர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X