search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம்-நகை கொள்ளை
    X

    அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம்-நகை கொள்ளை

    அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    அவனியாபுரம்:

    அவனியாபுரம் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் ஞானசி காமணி (வயது 55). இவரது மனைவி ஜான்ஸ் பெல் ராணி. கோடை விடுமுறை யை முன்னிட்டு இவர்கள் 10 நாட்கள் நாகர்கோவில் சென்றனர்.

    நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந் தன.

    இது குறித்து அவனியா புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்tசெல்வன், போலீஸ்காரர்கள் ராஜபாண்டி, முனியாண்டி ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    பீரோவில் இருந்த 6 பட்டுச்சேலைகள், வெள்ளி பொருட்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக ஜான்ஸ் பெல்ராணி தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×