search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டையில் குடியிருப்பு பகுதியில் மின்சார மயானம் அமைக்க எதிர்ப்பு
    X

    தேவகோட்டையில் குடியிருப்பு பகுதியில் மின்சார மயானம் அமைக்க எதிர்ப்பு

    குடியிருப்பு பகுதிக்குள் மின்மயானம் அமைவதை எதிர்த்து கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பொது மக்கள் பிரித்து எறிந்தனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியில் மின்மயானம் அமைக்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அவற்றில் முதற்கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் மின்மயானம் அமைவதை எதிர்த்து தி.மு.க நகர செயலாளர் பால முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் தலைமையில் சார் ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், இந்தப் பகுதியில் 600 வீடுகளுக்கு மேல் உள்ளது. மின்மயானம் அமைத்தால் சுற்று சூழல் மாசு அடைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கூறியிருந்தனர்.

    மனுவை பெற்ற சார் ஆட்சியாளரின் பதிலில் திருப்தி பெறாத பொது மக்கள் கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பிரித்து எறிந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

    தற்போது ஒத்தக்கடை ஆற்றுபாலம் அருகில் செயல்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைத்தால் அனைத்து மக்களும் பயன் பெறுவ தோடு எந்த வித இடையூறும் இருக்காது. போதிய இட வசதி இருந்தும் மின் மயானம் அந்தப்பகுதியில் அமையா திருக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    Next Story
    ×