search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புன்னம்சத்திரம் அருகே குடும்பதகராறில் இளம் பெண் தற்கொலை
    X

    புன்னம்சத்திரம் அருகே குடும்பதகராறில் இளம் பெண் தற்கொலை

    புன்னம்சத்திரம் அருகே குடும்பதகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மூலிமங்கலம், நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் யோகநாதன் (30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பூங்கொடி (26) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

    பூங்கொடியின் தந்தை பெருமாளுக்கும், பூங்கொடி குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூங்கொடி தந்தை பெருமாள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் யோகநாதனுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் வேதனை அடைந்த பூங்கொடி சம்பவதன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    Next Story
    ×