search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் ஆன 19 நாளில் தோட்டக்கலை அதிகாரி விபத்தில் பலி
    X

    திருமணம் ஆன 19 நாளில் தோட்டக்கலை அதிகாரி விபத்தில் பலி

    தருமபுரியில் திருமணம் ஆன 19 நாளில் தோட்டக்கலை அதிகாரி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி , பாரதிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயராஜன். இவர் தருமபுரியில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இவருக்கும் மெய்சேரி அடுத்த கட்ட புளியமரம் பகுதியை சேர்ந்த சுகுணா என்பவருக்கும் திருமணம் ஆகி 19 நாட்களே ஆகிறது.

    நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் கட்ட புளியமரம் கிராமத்தில் இருந்து மனைவியை அழைத்து கொண்டு பாரதி புரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

    பாளையம் புதூர் அருகே பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே விஜயராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுணாவுக்கு கால் முறிந்தது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×