என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பெண் என்ஜினீயருக்கு மாமனார் பாலியல் தொல்லை- கணவரும் உடந்தையாக இருப்பதாக புகார்
Byமாலை மலர்14 May 2018 8:20 AM GMT (Updated: 14 May 2018 8:20 AM GMT)
சேலம் அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பெண் என்ஜினீயர் புகார் அளித்துள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பிருந்தாஸ்ரீ (வயது 26). எம்.இ. பட்டதாரியான இவருக்கும், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் ஒருவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பிருந்தாஸ்ரீ மாமானார் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், பெற்றோரிடம் இருந்து கூடுதலாக நகை, வீடு வாங்கிவா என்று கூறி தொடர்ந்து அவர் மிரட்டுவதாகவும், அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பிருந்தாஸ்ரீ ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் சேலம் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்தோம். எனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வேறு நபர்களுக்கு என்னை பாலியலுக்கு உட்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும் என்னிடம் ரூ.50 லட்சம் பெருமான நகை, பணம், கார் ஆகியவை வரதட்சணையாக பெற்று கொண்டு கொடுமை படுத்திய எனது மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் எனது கணவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாததால் உயர் நீதிமன்றத்தை அணுகினேன். உயர் நீதிமன்ற உத்தரவு படி வழக்குபதிவு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனது கணவர் தொடர்ந்து ரவுடிகளை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறார். மேலும் என்னிடம் பண பலம், ஆள் பலம் உள்ளது நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நான் பார்த்து கொள்கிறேன், உள்ளே சென்றாலும் ஜாமீனில் வெளியே வந்து உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டுகிறார்.
எனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும், இதுவரை அவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. எனது கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஓமலூர் பகுதியில் இளம்பெண் வங்கி மேலாளரான கணவர் மீது பல அடுக்கடுக்கான புகார் தெரிவித்து டி.எஸ்.பி அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பிருந்தாஸ்ரீ (வயது 26). எம்.இ. பட்டதாரியான இவருக்கும், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் ஒருவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பிருந்தாஸ்ரீ மாமானார் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும், பெற்றோரிடம் இருந்து கூடுதலாக நகை, வீடு வாங்கிவா என்று கூறி தொடர்ந்து அவர் மிரட்டுவதாகவும், அதற்கு கணவர் உடந்தையாக இருப்பதாகவும் பிருந்தாஸ்ரீ ஓமலூர் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் சேலம் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, எங்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்தோம். எனது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் வேறு நபர்களுக்கு என்னை பாலியலுக்கு உட்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும் என்னிடம் ரூ.50 லட்சம் பெருமான நகை, பணம், கார் ஆகியவை வரதட்சணையாக பெற்று கொண்டு கொடுமை படுத்திய எனது மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் எனது கணவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாததால் உயர் நீதிமன்றத்தை அணுகினேன். உயர் நீதிமன்ற உத்தரவு படி வழக்குபதிவு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனது கணவர் தொடர்ந்து ரவுடிகளை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறார். மேலும் என்னிடம் பண பலம், ஆள் பலம் உள்ளது நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நான் பார்த்து கொள்கிறேன், உள்ளே சென்றாலும் ஜாமீனில் வெளியே வந்து உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டுகிறார்.
எனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும், இதுவரை அவரை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. எனது கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடன் என்னை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். ஓமலூர் பகுதியில் இளம்பெண் வங்கி மேலாளரான கணவர் மீது பல அடுக்கடுக்கான புகார் தெரிவித்து டி.எஸ்.பி அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X