search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X

    மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    மதுரையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 14).

    இவன், விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மர ஆலையில் வேலை பார்த்து வந்தான். கடந்த 12-ந் தேதி ராஜபாண்டி அங்கு பணியில் இருந்த போது கங்காராம் (50), பவானி ஆகிய 2 பேர் எந்திரத்தை சுத்தம் செய்யுமாறு கூறினர். அதனை செய்தபோது மின்சாரம் தாக்கியதில் ராஜபாண்டி தூக்கிவீசப்பட்டான்.

    அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்கள், மயங்கி விழுந்த ராஜ பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமபக இறந்தான்.

    இது குறித்து அவனது தந்தை கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காராம், பவானி ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×