search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை
    X

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

    சூலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    சூலூர் ஜெர்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50).

    முன்னாள் பேரூராட்சி துணை தலைவரான இவர் தி.மு.க. நகர துணை செயலாளராகவும் உள்ளார்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். இன்று காலை அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செல்வராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×