search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சேலத்தில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
    X

    சேலத்தில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

    சேலத்தில் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம், அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று அழகாபுரம் காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு சென்றார்.

    அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கோவிந்தசாமி ஒரு மறைவான இடத்தில் பதுங்கினார்.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கோவிந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கையில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும், முயல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை அழகாபுரம் போலீசார் பறிமுதல் செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். வாலிபர் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×