என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
நெல்லை மாவட்ட கடலோர பகுதியில் பலத்த மழை
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர கோடையில் வெயில் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது. அதே நேரம் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வந்ததால், வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் தண்ணீர் வருகிறது. நெல்லை மாவட்ட அணை பகுதியிலும் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இரவுகளில் பாளை பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கடற்கரை பகுதியான ராதாபுரம் தாலுகாவில் கனமழை பெய்தது. ராதாபுரத்தில் இன்று காலை வரை 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. அணைகளில் நீர்மட்டமும் அதே அளவு தொடர்ந்து நீடிக்கிறது. பாபநாசம் அணையில் 19.60 அடியும், மணிமுத்தாறு அணையில் 74.30 அடியும் உள்ளது.
இந்த கோடையில் மணிமுத்தாறு அணையில் 74.30 அடி தண்ணீர் உள்ளதால் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. தொடர்ந்து வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்