search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த பெண் பலி
    X

    புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த பெண் பலி

    மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வேலூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர் சம்பவத்தன்று புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரில் வசிக்கும் தனது மகள் சோபனா வீட்டுக்கு வர வேலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்தார்.

    புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய லட்சுமி தனது மருமகன் முத்துக்குமாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்து லட்சுமியை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    பாரதி மில் அருகே வந்த போது லட்சுமி வைத்திருந்த கைப்பை தவறி ரோட்டில் விழுந்தது. இதையடுத்து லட்சுமி பதட்டத்துடன் கைப்பையை எடுக்க முயன்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை முத்துக்குமார் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, லட்சுமணன், ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×