search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நெல்லை புறப்பட்டுச் சென்ற கமல்ஹாசன்.
    X
    நெல்லை புறப்பட்டுச் சென்ற கமல்ஹாசன்.

    மக்களின் அன்பில் மிதந்தேன்- கமல்ஹாசன்

    குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்ததாகவும், மக்களின் அன்பில் மிதந்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கன்னியாகுமரி:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இரவில் அவர், கன்னியாகுமரியில் ஓய்வு எடுத்தார். இன்று காலை குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அதன் பிறகு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்ட கமல்ஹாசனை நிருபர்கள் சந்தித்து குமரி மாவட்ட சுற்றுப்பயணம் எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கமல்ஹாசன் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மிகவும் அருமையாக அமைந்தது. ‘மக்களின் அன்பில் நான் மிதந்தேன்’ என்றார். பின்னர் அவர் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×