என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக உயர்வு
Byமாலை மலர்17 May 2018 5:30 AM GMT (Updated: 17 May 2018 5:30 AM GMT)
பெட்ரோல் லிட்டருக்கு 23 காசும், டீசல் லிட்டருக்கு 24 காசும் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
சென்னை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய பின்னர் விலையேற்றம் அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதால் தினமும் சிறிது சிறிதாக அதிகரித்து பெரியளவில் உயர்ந்து விட்டது.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு பொருளாதாரத்திலும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 12 ரூபாய் உயர்ந்துள்ளது.
கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் மட்டும் விலை உயர்த்தப்படாமல் நிலையாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 24-ந்தேதி முதல் இம்மாதம் 13-ந்தேதி வரை பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்தது. தேர்தல் முடிந்த உடனே அவற்றின் விலை உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல்- டீசலின் விலை இன்று 4-வது நாளாக மீண்டும் உயர்ந்தது. நேற்று பெட்ரோலின் விலை ரூ78.33 ஆகவும், டீசலின் விலை ரூ.70.62 ஆகவும் இருந்தன. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு அதிகரித்து ரூ.78.56 ஆக உயர்ந்தது. டீசல் லிட்டருக்கு 24 காசு அதிகரித்து ரூ.70.86 ஆக உயர்ந்தது. 4 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 39 காசும், டீசல் 46 காசும் அதிகரித்துள்ளன.
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகமானால் பொருட்களின் விலை உயரும்.
இதனால் ஏழை, அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பாதிக்கப்படுவார்கள். காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஏழை-நடுத்தர மக்களை அதிகமாக பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். #Petrol #Diesel
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X