என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
கவுந்தப்பாடி:
ஈரோட்டில் இருந்து அலுமினிய பீடிங் வேலை செய்யும் நாகராஜ் (வயது 50) என்பவர் சரத்குமார் (22) என்பவருடன் மொபட்டில் ஆப்பக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மொபட்டை நாகராஜ் ஓட்டினார். கவுந்தப்பாடி அருகே வளையக்காரபாளையம் குட்டை பக்கம் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், நாகராஜ் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளையக்கார பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (35), நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரத்குமாருக்கு கால் முறிந்தது. ராமச்சந்திரனின் மகன் அருணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி நாகராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்