search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் பணத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை
    X

    சாத்தான்குளத்தில் பணத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை

    சாத்தான்குளம் அருகே பணத்தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கள்ளம்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது45). இவர் சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிங்கம்(50) என்பவரிடம் ரூ.1000 கடன் வாங்கினாராம். அதை திரும்ப கொடுக்க தாமதமானது. இது லிங்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    உடனே தனது உறவினர் ஜெகன் என்பவருடன் சென்று செந்திலிடம் பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கம், ஜெகன் ஆகியோர் சேர்ந்து செந்திலை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதை பார்த்த லிங்கமும், ஜெகனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    செந்திலின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செந்திலுக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.#tamilnews
    Next Story
    ×