என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
மதுரை அருகே குழந்தைகளுடன் பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
மதுரை:
மதுரை அருகே உள்ள சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மனைவி மலை ஈஸ்வரி (வயது 38). இவர்களுக்கு மகாலட்சுமி என்ற குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று மலை ஈஸ்வரி தனது மகள் மகாலட்சுமியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததால் தங்கப்பெருமாள், சிலைமான் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மலை ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி ஆகியோரை தேடி வருகிறார்.
இதேபோல் மதுரை மாவட்டம், கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி (29).
சம்பவத்தன்று லட்சுமி தனது மகன்கள் முத்தரசு (11), பாலாஜி (10) ஆகிய 2 பேருடன் அருகே உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் லட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் திருமங்கலம் தாலுகா போலீசில் கணேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்