என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவாரூரில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்21 May 2018 8:27 AM GMT (Updated: 21 May 2018 8:27 AM GMT)
திருவாரூரில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் வடக்கு கோபுர வாசல் பகுதியில் வசிப்பவர் பிரவீன் (வயது 38). இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்று விட்டார். அவர் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் உறவினர் திலகவதியிடம் கொடுத்து மாலை விளக்குகளை எரிய விடுமாறு கூறி சென்றார்
இந்த நிலையில் பிரவீன் வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று மாலை திலகவதி வீட்டுக்கு சென்ற போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பிரவீனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அவர் நகை கொள்ளை நடந்து இருப்பது குறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
திருவாரூர் வடக்கு கோபுர வாசல் பகுதியில் வசிப்பவர் பிரவீன் (வயது 38). இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்று விட்டார். அவர் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் உறவினர் திலகவதியிடம் கொடுத்து மாலை விளக்குகளை எரிய விடுமாறு கூறி சென்றார்
இந்த நிலையில் பிரவீன் வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று மாலை திலகவதி வீட்டுக்கு சென்ற போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பிரவீனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அவர் நகை கொள்ளை நடந்து இருப்பது குறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X