என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் பனியன் கம்பெனி விடுதியில் இளம்பெண் தற்கொலை
திருப்பூர்:
அரியலூர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகள் செம்பருத்தி (வயது 17).
இவர் திருப்பூர் மண்ணரையில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த செம்பருத்தி கடந்த வாரம் ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது பெற்றோர் கூறினர்.
ஆனால் செம்பருத்தி திருமணத்திற்கு மறுத்து வந்தார். ஆனாலும் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் செம்பருத்தி திருப்பூருக்கு வேலைக்கு வந்து விட்டார். நேற்று விடுமுறை என்பதால் செம்பருத்தி மட்டும் விடுதியில் தங்கியிருந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் அவரின் நடமாட்டம் இல்லாததால் அவரது தோழிகள் விடுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது செம்பருத்தி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செம்பருத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்