என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 தேர்வில் தோல்வி - குட்டையில் குதித்து மாணவர் தற்கொலை
Byமாலை மலர்22 May 2018 9:52 AM GMT (Updated: 22 May 2018 9:52 AM GMT)
கோவையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத சோகத்தில் மாணவர் குட்டையில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சிங்காரவேலு. மெக்கானிக். இவரது மகன் நவீன் (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் கணிதம், இயற்பியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
ஆனால் இவரது நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக நவீன் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த நவீன் தனது பெற்றோரிடம் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். குட்டையன் தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த நவீன் திடீரென அருகே இருந்த மயிலேரிபாளையம் குட்டையில் குதித்தார்.
இதனை பார்த்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குட்டையில் இருந்து நவீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X