search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - 11 பேர் கைது
    X

    தர்மபுரியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - 11 பேர் கைது

    தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆலோசனையின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரம், கிருஷ்ணவேணி, கோபி மற்றும் போலீசார் தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குமார் (வயது 54), மணிவண்ணன் (42), ராஜேந்திரன் (58), சண்முகம் (40), ராமமூர்த்தி (42), ராஜேஸ்வரி (44), கலைவாணி (55) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரமேஷ்குமார், லாலாம் சவுதிரி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×