search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்
    X

    தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #MKStalin

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 



    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி நகருக்கு வந்தார். அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சாதித்து ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #MKStalin
    Next Story
    ×