என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டி அருகே கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவர் கைது
Byமாலை மலர்23 May 2018 11:52 AM GMT (Updated: 23 May 2018 11:52 AM GMT)
பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஓருவர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் காலனியை சேர்ந்தவர் கண்ணனன் (வயது 47). இவரது மனைவி அஞ்சலை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசன் என்பவரது மனைவி நாவம்மாள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அரசன் மற்றும் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலை மற்றும் இவரது கணவர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த கண்ணன், அஞ்சலை ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, அரசன் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், செண்பகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நாவம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X