search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை புரட்சிக்கர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாநகர செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் சூரம்பட்டி நால் ரோட்டில் அருந்ததியர் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தமிழ்நாடு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    Next Story
    ×