search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருப்புல்லாணி அருகே இளம்பெண் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக புகார்
    X

    திருப்புல்லாணி அருகே இளம்பெண் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக புகார்

    திருப்புல்லாணி அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள ஆண்டித்தேவன் வலசையைச் சேர்ந்தவர் நாகசாமி. இவரது மகள் ரேகா (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் அருகில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரேகா பிணமாக கிடந்தார். இது குறித்து குதக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி காளிதாஸ் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார்.

    அதில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×