search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே ஆட்டோ மீது பைக் மோதியதில் வாலிபர் பலி
    X

    கம்பம் அருகே ஆட்டோ மீது பைக் மோதியதில் வாலிபர் பலி

    கம்பம் அருகே ஆட்டோ மீது பைக் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (36) என்பவரை ஏற்றிக்கொண்டு கூடலூர் சென்றுகொண்டிருந்தார்.

    கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் ஈஸ்வரன் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

    அப்பாச்சிபண்ணை என்ற இடத்தில் வந்தபோது ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் பைக்கில் வந்த குமார், ஈஸ்வரன், ஆட்டோவில் வந்த ரமேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×