search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருமங்கலம் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் நகை -பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மணி நகரைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவருடைய மகன் ரத்தினவேல் (வயது38).

    இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக உள்ளார். சம்பவத்தன்று மனைவி சசிகலாவுடன் தென்காசியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு ரத்தினவேல் சென்றார்.

    நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்ற ரத்தினவேல், வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே கிடந்தன. இதனால் வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வை விட்டனர். பீரோவில் இருந்த 6 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதாக போலீசாரிடம் ரத்தின வேல் தெரிவித்தார்.

    வீட்டு பூட்டு திறக்கப் படாமல் இருக்கும்போது கொள்ளையர்கள் எப்படி உள்ளே புகுந்தனர் என போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. ஆக்சா பிளேடு மூலம் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளன.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் இந்த துணிகர செயலில் இறங்கி உள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

    Next Story
    ×