என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெட்டப்பாக்கம் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலித்தொழிலாளி தற்கொலை
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் அந்தராசிக் குப்பம் தேவகி நகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சதாசிவத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவ்வப்போது அவரது மனைவி நாகலட்சுமி கண்டிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் சதாசிவம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது நாகலட்சுமி கண்டித்தார். இதனால் சதாசிவம் மனமுடைந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று அதிகாலை நாகலட்சுமி முதல் ஷிப்டு வேலைக்கு சென்று விட்டார். மகன்களும் வெளியே விளையாட சென்ற நிலையில் சதாசிவம் வீட்டில் மின்வயரில் தூக்குபோட்டு தொங்கினார்.
காலை உணவு சாப்பிட நாகலட்சுமி வீட்டுக்கு வந்த போது கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்