search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காதல் திருமணத்திற்கு தாமதம்: இளம்பெண் தற்கொலை
    X

    காதல் திருமணத்திற்கு தாமதம்: இளம்பெண் தற்கொலை

    காதல் திருமணத்திற்கு தாமதமானதால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

    மதுரை:

    மதுரை பைக்காரா முத்துராமலிங்காபுரம் பாலநாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் நிவேதா (வயது 18).

    இவரது உறவினரான சிவமுருகன் என்பவரை காதலித்தாராம். இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். நிவேதாவுக்கு 18 வயதே ஆவதால் 6 மாதம் கழித்து திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இது நிவேதாவுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகிய நிலையில் கிடந்த நிவேதாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று நிவேதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பெரிய முனியாண்டி. இவரது மகள் விஷாலி (வயது 21)மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×