search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே மகன் கண் முன் தந்தை பஸ் மோதி பலி
    X

    ஈரோடு அருகே மகன் கண் முன் தந்தை பஸ் மோதி பலி

    ஈரோடு அருகே மகன் கண் முன்னே தந்தை பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு, சம்பத் நகர் ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் விஜயசேகரன் (வயது52). தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணி புரிந்து வந்தார்.

    நேற்று விஜயசேகரன் தனது மகன் பிரேம்குமாருடன் மோட்டார்சைக்கிளில் திண்டல் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சும், விஜயசேகரன் வந்த மோட்டார்சைக்கிளிலும் மோதி கொண்டன.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் உயிரிழந்த விஜயசேகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×