search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு அருகே வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை
    X

    கோயம்பேடு அருகே வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை

    கோயம்பேடு அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு, மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 23), கூலித்தொழிலாளி. இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கணேசன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்தில் கிடந்தது.

    கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணேசனின் கழுத்தில் பலத்த காயம் இருந்தது.

    எனவே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தார? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, கணேசனின் கழுத்தில் காயம் உள்ளதால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது என்றார். #Tamilnews
    Next Story
    ×