search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குழந்தை இல்லாததால் மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
    X

    குழந்தை இல்லாததால் மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுநல்லூர், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இருங் காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த பானுபிரியா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சதீஷ் மாமியார் வீட்டில் தங்கி இருதார்.

    குழந்தை இல்லாதது தொடர்பாக சதீசுக்கும் மனைவி பானுபிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாமியார் கடைக்கு சென்று இருந்த போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சதீஷ், மனைவி பானுபிரியாவை சரமாரியாக தாக்கி பெல்டால் கழுத்தை நெறித்தார். பின்னர் அருகே இருந்த கத்தியால் பானு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பானு பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சோமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த சதீசை போலீசார் கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×