என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் சென்டாக் கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்2 Jun 2018 8:06 AM GMT (Updated: 2 Jun 2018 8:06 AM GMT)
புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு 28-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பட்டமேற்படிப்பு, தொழில்கல்வி பிரிவு, தொழில்கல்வி அல்லாத பாடப்பிரிவு, ஓட்டல் மேலாண்மை, பட்டயப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு தற்போது மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கால்நடைமருத்துவம், பி.எஸ்.சி. செவிலியர், எம்.எம்.டி., என்ஜினீயரிங், பி.காம்., பி.ஏ, எல்எல்பி, பி.எஸ்.சி. விவசாயம், தோட்டக்கலை ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் வருகிற 20-ந்தேதி வெளியிடப்படும்.
இதில் ஆட்சேபனை இருந்தால் திருத்தம் செய்ய 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். 22-ந்தேதி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு 28-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வில் இடம்பெற்றவர்கள் ஜூலை 15-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ந் தேதி தொடங்கும். இதில் இடம் பெற்றவர்கள் ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பட்டமேற்படிப்பு, தொழில்கல்வி பிரிவு, தொழில்கல்வி அல்லாத பாடப்பிரிவு, ஓட்டல் மேலாண்மை, பட்டயப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு தற்போது மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கால்நடைமருத்துவம், பி.எஸ்.சி. செவிலியர், எம்.எம்.டி., என்ஜினீயரிங், பி.காம்., பி.ஏ, எல்எல்பி, பி.எஸ்.சி. விவசாயம், தோட்டக்கலை ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் வருகிற 20-ந்தேதி வெளியிடப்படும்.
இதில் ஆட்சேபனை இருந்தால் திருத்தம் செய்ய 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். 22-ந்தேதி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு 28-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வில் இடம்பெற்றவர்கள் ஜூலை 15-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ந் தேதி தொடங்கும். இதில் இடம் பெற்றவர்கள் ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X