search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த சேவை புரியும் பெண்கள் சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
    X

    சிறந்த சேவை புரியும் பெண்கள் சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

    சிறந்த சேவை பிரியும் பெண்கள் சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநலத் துறையின் மூலம் 2018-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம், விருதுக்கு பெண்களின் நலன், மேம்பாட்டிற்காக பணிபுரியும் தகுதியான தனிநபர், தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

    மேலும் விருது வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.

    தாங்கள் செய்த சேவை குறித்த உரிய விவரங்கள், அத்தாட்சியாக படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்களும் தர வேண்டும்.

    பிறந்த தேதி, கல்வித்தகுதி, போன்ற முழு முகவரியுடன், தொலைபேசி எண்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#tamilnews
    Next Story
    ×