search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31), கூலி தொழிலாளி. அத்திப்பட்டில் வேலை முடித்துவிட்டு நண்பர் ரமேசுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    வடசென்னை அனல் மின் நிலையம் 3-ம் நிலை அருகில் வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் விஜயகுமார் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ரமேசை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×