search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
    X

    கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

    கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி டெய்சி மேரி (வயது27). இவர்களுக்கு மரியரீனா (8) என்ற மகளும், மரிய டெல்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.

    கூலி வேலை பார்த்து வரும் வேளாங்கண்ணி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியிடம் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். மேலும் போதையில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் டெய்சிராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்தபிறகு குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவர்களுக்கும் வி‌ஷத்தை கொடுத்து தானும் குடித்தார். இன்று அதிகாலை 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×