search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் காதலிக்க மறுத்ததால் பிளஸ்-2 மாணவி கடத்தல்
    X

    மதுரையில் காதலிக்க மறுத்ததால் பிளஸ்-2 மாணவி கடத்தல்

    மதுரையில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கடத்தியது தொடர்பாக வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம், புலித்தேவன் தெருவைச் சேர்ந்த 16 வயதுடைய மைனர் பெண் புதுநத்தம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்த வாலிபர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அடிக்கடி மாணவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்ததோடு, வாலிபரை கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை மாணவி மீது அடித்துள்ளார்.

    இதில் மயங்கிய மாணவியை, வாலிபர் காரில் கடத்தினார். இதற்கு உடந்தையாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் செயல்பட்டுள்ளார்.

    ஒரு இடத்தில் காரை நிறுத்தி வாலிபர் உள்பட 2 பேரும் அருகில் இருந்த கடைக்கு சென்றனர். அப்போது மயக்கம் தெளிந்த அந்த மாணவி நைசாக காரில் இருந்து தப்பினார்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×