search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் அருகே வடமாநில தொழிலாளி கொலை
    X

    காங்கயம் அருகே வடமாநில தொழிலாளி கொலை

    காங்கயம் அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக்கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் நாயக் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் நாயக்குடன் அவரது நண்பர்கள் 2 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். 3 பேருக்கும் குடிபழக்கம் இருந்துள்ளது. போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தோஷ் நாயக்கை அவரது நண்பர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×