என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- அமைச்சர் வழங்கினார்
Byமாலை மலர்8 Jun 2018 2:00 AM GMT (Updated: 8 Jun 2018 2:00 AM GMT)
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்டும் வகையில் அந்த பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்த ஊக்கத்தொகையில் தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரமும், ஆசிரியர்கள் சுற்றுலா செல்வதற்கு ரூ.20 ஆயிரமும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரமும் பயன்படுத்தப்படுகிறது. #tamilnews
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்டும் வகையில் அந்த பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்த ஊக்கத்தொகையில் தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரமும், ஆசிரியர்கள் சுற்றுலா செல்வதற்கு ரூ.20 ஆயிரமும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரமும் பயன்படுத்தப்படுகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X